states

img

ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நிசித் பிரமாணிக்கு பிடி வாரண்ட்!

இரு நகைக்கடைகள் திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நிசித் பிராமாணிக்கு பிடி வாரண்ட் வழங்கி அவரை கைது செய்ய அலிபுர்துவார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று இந்த இரு வழக்குகளும் விசாரணக்கு வந்த போது, அவர் ஆஜராகவில்லை என்றும், அவரது சார்பாக வழக்கறிஞரும் ஆஜராகவில்லை என்று அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெற உள்ள விசாரணைக்கு, காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று பிடிவாரண்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.